கோவை மாவட்டம், மேட்டுபாளையம் குன்னூரில் கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து ரயில் பாதையில் விழுந்ததால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மாவட்டம், மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி செல்லும் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும். இம்மலை ரயில் போக்குவரத்து மழை காலங்களில் இதன் ரயில் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபட்டு நிற்கிறது.

நேற்று இரவு மலை ரயில் போக்குவரத்து கடந்து செல்லும் மலை பாதையில் மேட்டுபாளையம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மழை நீரில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாள பாதை தெரியாமல் புதைந்து போனதோடு மரங்கள் முறிந்து தண்டவாள பாதையில் சாய்ந்தன.
இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து காணப்படும் பகுதியில் சீரமைப்பு பணிக்காக (20)க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பணியாளர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் சரிவு மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து காணப்படும் நிலையில், இன்று மாலைக்குள் மலை ரயில் பாதை சீர் செய்யப்பட்டு, நாளை வழக்கம் போல் தினசரி மலை ரயில் இயக்கம் நடைபெரும் என நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.