கோவை துடியாலூரை அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி சி.ஆர்.பி.எப் உள்ளது. இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் காவலர் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை வீரர்களுக்கு இங்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வளாகத்தில் தடுப்பு சுவர் அமைத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சுடப்படும் குண்டுகள் தடுப்பு சுவர்களுக்குள்ளேயே விழுந்து விடும். இதனால் மற்றவர்களுக்கும், மற்ற உயிரனங்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கோவை சி.ஆர்.பி.எப் கல்லூரி முதல்வர் மற்றும் ஐ.ஜி. அஜய் பரதன் அனைவரையும் வரவேற்று பேசினார். சென்னை மண்டல டி.ஐ.ஜி அருள்குமார் துப்பாக்கி சுடும் மையத்தை பற்றி கூறினார். தொடர்ந்து இந்த மையத்தை சி.ஆர்.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, இந்தியாவிலுள்ள சி.ஆர்.பி.எப் கல்லூரிகளில் முதன் முறையாக நவீன மையமான தூப்பாக்கி மையம் இங்கு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சி.ஆர்.பி.எப் வீரர்களின் தூப்பாக்கி சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பெண் வீரர்கள் உள்ளிட்டவர்கள் கீழே படுத்துக்கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் வைக்கப்பட்டு இருந்த பானைகளை சரியாக சுட்டு வீழ்த்தி சாகசம் செய்தனர்.
மேலும் 59 வயதான வீரர் ஒருவர் நின்றுகொண்டு தூரத்தில் இருந்த இரும்பு தகிடை தொடர்ச்சியாக சுட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சாகச நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட வீரர்களை சி.ஆர்.பி.எப் தலைவர் சுஜய் லால் தோசன் கை குழுக்கி வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு இந்த சுப்பாக்கி சுடும் மையத்தை ஆய்வு செய்த அவர் தனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் உள்ள சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரிகளில் நவீன கட்டமைப்பு இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு சுப்பாக்கி சுடும் மையம் உள்ளது. ஆனால் இந்த மையம் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 4ல் ஒரு பங்கு செலவில் இந்த சுப்பாக்கி சுடும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை எந்த இடத்திற்கு வேனுமானலும் கொண்டு சென்று வைக்கலாம். இந்த மையம் மூலம் தரப்படும் பயிற்சியால் சி.ஆர்.பி.எப் வீரர்களின் தூப்பாக்கி சுடுவதலில் தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பிரிவினைவாதிகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் வேலை செய்கிறது. இதற்காக சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடைபெறும் மீசோராம், சத்திஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து எங்கள் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனியாக சி.ஆர் .பி.எப். வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பகுதியில் முன்பை விட தற்போது தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் இடங்களில் கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை கண்காணித்து அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி பவானிஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகள், வீரர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.