Krishnagiri : என்.சி.சி. பயிற்சி வகுப்பில் மாணவிக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் , சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணை

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் உட்பட 41 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 9 அன்று கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மாணவியை, அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை செய்துள்ளார்.

போலி ncc மாஸ்டர் சிவராமன்

பின்னர், இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் போலியாக என்.சி.சி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன், ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/destruction-of-natural-resources-rampant-sand-quarrying-near-thiruvalluvar-sand-smugglers-give-death-threats-to-local-villagers/

இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review