மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு.

2 Min Read
  • மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு.

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆவணங்கள் உள்ளது குற்ற பத்திரிகை ரத்து செய்யக்கூடாது சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு.மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை –
சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்.

- Advertisement -
Ad imageAd image

வழக்கு இறந்து போன மாணவி தரப்பு வாதத்திற்காக ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி கிராமத்தில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபைக்கு பாத்தியப்பட்ட பள்ளி உள்ளது. கடந்த 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவி லாவண்யாவை, மதம் மாறவற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவி லாவண்யா உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியின் நிர்வாகியான அருட் சகோதரி (கன்னியாஸ்திரி) சகாயமேரியை போலீஸôர் கைது செய்தனர் பின்னர் ஜாமினில் வந்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சகாயமேரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,

மாணவி லாவண்யா உயிரிழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாற கோரி யாரும் வற்புறத்தவில்லை. எனவே இந்த வழக்கில் என் மீது விசாரணை நீதிமன்றத்தில் போலீஸôர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன், முன்பாக விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில்,ஆஜரான வழக்கறிஞர் முகையதீன் பாட்சா ஆஜராகி வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 265 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.நன்கு படிக்கும் மாணவியான லாவண்யாவை பிற வேலைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால் மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. ஆகவே குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை செபம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review