திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளை பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய நெல் திருவிழா

1 Min Read
பாரம்பரிய நெல் திருவிழா

கோட்டூரில் பாரம்பரிய நெல் திருவிழா 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை கண்காட்சிக்கு வைத்து நெல் திருவிழா டெல்லி சிறப்பு பிரதிநிதி மாட்டுவண்டியில் நம்மாழ்வார் புகைப்படத்துடன் ஊர்வலம்.

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளை பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்பட்டது நெல் திருவிழாவில் தொடக்கமாக மாட்டு வண்டியில் நம்மாழ்வார் புகைப்படம் பொருந்திய மாட்டு வண்டியினை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மாட்டு வண்டியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஒட்டி பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் கண்காட்சிக்கு வைத்தனர் இதில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்புயானை, கொம்பன், சேலம் சன்னா உள்ளிட்ட பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய கருவிகள்  காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இந்த நெல் திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இயற்கை வழியில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் திருவிழா நடத்தப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் நஞ்சு இல்லா உணவு நம்மாழ்வார் கூற்றின்படி நிறைவேற்றவும் தற்சார்பு வாழ்வில் கிராம பொருளாதாரத்தோடு இணைந்து வாழ விதைகளை பேராயினும் என்ற கூற்றின்படி இந்த நெல் திருவிழா நடத்தப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல்லை கொடுத்து அடுத்த வருடம் நான்கு கிலோ விதைகளாக அவரிடம் இருந்து பெரும் முயற்சியையும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Share This Article
Leave a review