திருப்பத்தூர் அருகே காதல் ஜோடி தப்பி ஓட்டம்! பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் இவரது மனைவி பாரதி இவருடைய மகள் அக்ஸ்யா வயது 19. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் அவரது மகன் விஜய் வயது 25 என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததது இருவீட்டாருக்கும் தெரியவந்தது.இதனை அறிந்த பெற்றோர்கள் காதலர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக காதல் ஜோடி இருவரும் விடியற்காலை 5 மணி அளவில் வீட்டை விட்டு ஓடி சென்று உள்ளனர். மேலும் பெண் வீட்டு பெற்றோர்கள் பெண்ணை காணவில்லை என்று பதறி போய் அகஸ்யாவை பல்வேறு இடங்களில் தேடி வந்து உள்ளனர்.
பின்னர் பெற்றோர்களுக்கு காதலர்கள் இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் வீட்டார்கள் கோபத்தில் அப்பகுதியில் இருந்த விஜய்யின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இதன் காரணமாக விஜய்யின் வீடு மளமள வென தீ பற்றி எரிந்தது.விஜய்யின் வீட்டில் அருகில் உள்ளவர்கள் இதை கண்டு போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கையில்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விஜய்யின் வீட்டை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்த அக்ஸாயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.