குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை.அண்ணன் மகன்களே வெட்டி கொலை செய்தது அம்பலம்.

1 Min Read
உயிரிழந்த விசிக பிரமுகர்

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ், இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்திருந்திருந்தார். மேலும் இவர் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில், ஆகிய இருவரும்  அதிஷிடம் தகராறு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

தகராறு பெரிதான நிலையிைல் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அதிஷை வெட்டியுள்ளார்கள். அப்போது அந்த பகுதியில் தடுக்க வந்த அதீஷின் அண்ணன்களான முரளி, சுகுமார், உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு கொண்டு செல்லும் வழியில் அதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிஷின் அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இறந்து போன அதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான அதீஷின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அதீஷின் அண்ணன் மகன்களே சேர்ந்து அதீஷை கொலை செய்தது தெரியவந்தது இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review