தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் வயது 27. இவர் சென்னையில் லாரி டிரைவராக இருந்தார். இவரை கும்பகோணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வயது 50. இவர் போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொன்று வீட்டில் புதைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து கேசவ மூர்த்தியை கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது;
கடந்த 2008 ஆம் ஆண்டு கேசவ மூர்த்திக்கு ஆண்மை குறைபாடு இருந்த காரணத்தால் சென்னையில் உள்ள ஒரு சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவரிடமே சித்த மருத்துவம் குறித்து கற்றுள்ளார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு தனக்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் இருந்ததால் மற்ற ஆண்களுக்கு ஆசைகளை தூண்டுவதற்கு நாகூரில் உள்ள ஒருவரிடம் ஒருவகையான மூலிகைச் செடி குறித்து கற்றுக் கொண்டுள்ளார். இந்த மூலிகை செடியை கேசவமூர்த்தி பொடியாக்கி, அந்த மருந்துக்கு கிறுக்கி முறுக்கி என்று பெயரிட்டு தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாளடைவில் மூலிகை பொடியை மாத்திரையாக தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கேசவமூர்த்தியிடம் அசோக்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கேசவ மூர்த்தி அசோகராஜிற்கு இரண்டு மூலிகை மாத்திரைகளை கொடுத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சுயநினைவை இழந்த அசோகராஜின் மர்ம உறுப்பை வெட்டி, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
உடலில் இதர பாகங்களான இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலாவுடன் சமைத்து உணவாக சாப்பிட்டு நாய்களுக்கும் போட்டு ரசித்துள்ளார். இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு 27ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன முகமது அனஸ் வயது 26 என்பவருடன், கேசவமூர்த்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் தனது திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோவப்பட்ட கேசவமூர்த்தி இரண்டு மாத்திரைகளை கொடுத்து அனஷை மயக்கம் அடைய வைத்துள்ளார். யூடிபில் போஸ்ட் மாடம் செய்வதை பார்த்து, முகமது அனஸ் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்து, குறிப்பிட்ட பாகங்களை சமைத்து சாப்பிட்டு தான் கொலை செய்ததை மறைத்து உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.