தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புதுமணபெண் சாவில் சந்தேகம் மரண வழக்கு கொலை வழக்காக மாறிய சம்பவம் குறித்து கணவர் கைது. தஞ்சை அருகே (2) மாதத்தில் திருமணமான கல்யாண பெண்ணை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி மாதா கோவில் தெருவில் வசிக்கும் விவேக் வயது (35) இவர் சென்ட்ரிங் கம்பி கட்டும் கூலி வேலை பார்க்கும் இவருக்கும் தஞ்சை – கரந்தை சறுக்கை சவேரியார் கோவில் தெருவில் வசிக்கும் மார்த்தாள்மேரி (29) வயது ஆகியோர் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் -20ம் தேதி பெரியோர்களின் முன்னிலை திருமணம் நடைபெற்று உள்ளது .திருமணம் நிகழ்ச்சி அழைப்புகள் முடிந்த பிறகு கணவர் வீட்டுக்கு செல்லாமல் தந்தையின் வீட்டிலேயே மனைவி மார்த்தாள்மேரி, இருந்து உள்ளார். இந்த நிலையில் பெண்ணை (20) நாள் கழித்து பெற்றோர்கள் கடந்த (22) தேதியன்று மேலத்திருப்பூந்துருத்தி, கணவர் விவேக் வீட்டில் விட்டுள்ளனர்.

இரண்டு நாள் கழித்து திடீரென அதிகாலையில் வீட்டில் மயங்கி கிடப்பதாக கூறி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு மார்த்தாள்மேரியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மார்த்தாள்மேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மார்த்தாள்மேரியின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரந்தை – சருக்கை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைப் கைபற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாக இருப்பதால் தஞ்சை ஆர்.டி.ஒ. இலக்கியா, இது குறித்து விசாரணை நடத்திவருகிறார்.

பெண்ணின் தாயார் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகாரின் பேரில் கணவர் விவேக்கை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தது. கணவர் விவேக்கு அதே ஊரை சேர்ந்த வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண் பெயரை மார்பில் பச்சை குத்தியுள்ளார். இதை மனைவி மார்த்தாள்மேரி கண்டித்துள்ளார். மேலும் தாம்பத்திய உறவில் கணவர் விவேக் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு வந்துள்ளார். இதனால் மனைவி பயப்படும் அளவுக்கு தாம்பத்திய உறவு இருந்துள்ளது. ஆயுத பூஜை அன்று இரவு மனைவிக்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார் கணவர் விவேக். இரவு 12 மணிக்கு மேல் வீட்டில் மனைவியை குடிபோதையில் தாம்பத்திய உறவுக்கு அழைக்கும் போது குடிபோதையில் இருப்பதாக கூறி வர மறுத்துள்ளார் மனைவி மார்த்தாள்மேரி.

கோபம்டைந்த கணவர் விவேக் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவர் விவேக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை, சிறையில் அடைந்தனர். மேலும் திருமணமான (2) மாதத்தில் மனைவியை கணவர் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.