சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழக்கோட்டை பகுதியில் வசிப்பவர் பாலாஜி இவர், தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் கல்லல் கிராமத்தில் இருந்த வீடு மற்றும் இடம் ஆகியவைகளை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அவர் கல்லல் ஊராட்சி மன்றத்தில் தன்னுடைய பெயருக்கு வீட்டு வரி ரசீது மாற்றி வழங்கும்படி விண்ணப்பித்தார்.

ஆனால் பாலாஜி பெயருக்கு வரி ரசீது வழங்குவதற்கு கல்லல் நகர அதிமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான நாச்சியப்பன்வயது(55) , ரூ.13 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என பாலாஜியிடம் கேட்டுள்ளார். இதனால் பாலாஜி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில்,பாலாஜி கல்லலில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த தலைவர் நாச்சியப்பனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பணத்தை கொடுத்தாதகாக கூறப்படுகிறது.
அப்போது நாச்சியப்பன் அந்த பணத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே உள்ள தன்னுடைய கார் டிரைவரும் நண்பருமான சங்கர் என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார் இதைத்தொடர்ந்து பாலாஜி வெளியில் நின்று கொண்டிருந்த சங்கரிடம் பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான மாவட்ட லஞ்ச ஒழிப்புகாவல்துறையினர்ஊராட்சி மன்ற தலைவரான நாச்சியப்பன் மற்றும் கார் ஓட்டுனரான சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.