தமிழின் தொன்மையை தற்போது அகழ்வாரய்ச்சிகள் நிரூபித்து வருகின்றது.பல இடங்களில் கிடைக்கும் அரியவகை பொருட்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.அந்த வகையில் இப்போது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப்பணியில் அரண்மனையில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஏற்கன்வே நடத்திய நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கம்,இரும்பு,என பல வகை உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்டதை நாம் அறிவோம்.பல இடங்களில் முதுமக்கள் தாழி கட்டிட அமைப்பு,பழங்காலத்தில் நாம்முடைய முன்னோர்கள் பயன் படுத்திய பல்வேறு கலைப் பொருட்கள் என கண்டெடுக்கப்பட்டது.அந்த வகையில் இப்போது மாளிகைமேட்டில் கிரானைட் கல் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆராய்ட்சியாளர்கள்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில்,கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக பிரகதீஸ்வரர் கோயில் கட்டினார். இது எல்லோரும் அறிந்ததே.உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் அருகே மாளிகைமேடு உள்ளது. இந்த பகுதியில் தான் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.

இங்கு நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வு பணிகளின் போது, மாமன்னன் ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள், சீன வளையல்கள், இரும்பிலான ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1982 இல் இருந்து மாளிகை மேடு சுற்றி 5 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிராமங்களில் அரண்மனை குறித்து தொல்லியல் எச்சம் எதுவும் தென்படுகிறதா? என தொல்லியல் துறையின் சார்பில் பொன்னேரி கரை, மண்மலை, உள்ளிட்ட பகுதிகளில் முன்பே ஆய்வு மேற்க் கொண்டு உள்ளனர். இதையடுத்து ஏப்.6-ம் தேதி 3-ம் கட்ட அகழாய்வு பணிக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மாளிகைமேடு அருகேயுள்ள உட்கோட்டையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி சில துவங்கி நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், உக்கோட்டை குறும்பு அய்யனார் கோயில் திருக்குளம் அருகே பொன்னேரி நீர்வரத்து வாய்க்காலில் 72 செ.மீட்டர் அகலம், 76 செ.மீட்டர் ஆழம் சுமார் 6.40 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் நீளம் இன்னும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை அரண்மனைக்கு பயன்படுத்தப்பட்ட தூணாக இருக்காலம் என்றும், முழுமையாக தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே அவற்றின் முழுவிபரம் தெரியவரும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தூண் முழுவதையும் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.