கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு ஆதரவு அளிக்கிறது – தொல். திருமாவளவன்

1 Min Read
கோகுல்ராஜ். யுவராஜ்

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை  உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள  வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித்  தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.

இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம்.

அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.ப.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review