வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து – சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

1 Min Read
நூற்பாலையில் தீ

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில்  தீர்த்தாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  நூற்பாலையில்  (OE cotton mill)-ல் தீ விபத்து ஏற்பட்டது . சுமார் ஒரு கோடிக்கு மேலான நூல்,இயந்திரங்கள்,கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதம்மாகியது. வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து குறித்து வெள்ளகோவில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
தீயணைப்புத் துறையினர்

‌காங்கேயம் அருகே வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையத்தில் சிவக்குமார் (40) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ முருகன் காட்டன் மில்ஸ் (OE cotton mill)-ல் இயங்கி வந்தது.இதில் சுமார் 20 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நூல் மில்லில் இன்று மதியம் தீப்பிடித்து புகை வந்துள்ளது. இதை பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். அதற்குள் தீ மள மளவென பல இடங்களில் உள்ள  நூல் மற்றும் இயந்திரங்களில் பரவ தொடங்கியது.

பயங்கர தீ

இதை பார்த்த தொழிலார்கள் அலறியடித்து மில்லை விட்டு வெளியேறினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பிரபாகரன்,வேலுசாமி தலைமையில் ஆனா தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். பின்னர் இவர்களுக்கு உதவியாக காங்கேயம் தீயணைப்பு துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர்.சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில்  இயந்திரங்கள், நூல்கள், கட்டிடங்கள் என சுமார் ரூ.1 கோடிக்கு மேல் சேதமாகியது. தீவிபத்தானது எவ்வாறு ஏற்பட்டது மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறுவிதமாக ஏற்பட்டுள்ளதா என்று வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‌இந்த தீ விபத்தில் மில்லில் பணியில் இருந்த தொழிலார்கள் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினர். வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூற்பாலையில் தீவிபத்து குறித்து வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article
Leave a review