புழல் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி; காவலர்கள் பணியிடை நீக்கம்!

2 Min Read
கைதி

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்தியச் சிறையிலிருந்து பெண் கைதி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த 2 பெண் சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்..

- Advertisement -
Ad imageAd image

பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளார்.குடியேரிய ஜெயந்திக்கு திருட்டு பழக்கம் உள்ளது.அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் திருடுவதற்கு நோட்டமிட்டுள்ளார் ஜெயந்தி. அப்போது அந்த பகுதியில் (2021 ஆம் ஆண்டு) ஒரு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துள்ளார் ஜெயந்தி.திருடு போன வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.புகாரை விசாரித்த போலீசார் ஜெயந்தி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் திருட்டு வழக்கில் துரைப்பாக்கம் போலீசார் ஜெயந்தியை கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

புழல் சிறை

பின்னர் சிறைக்குள் கைதிகளுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தூய்மை பணி, சுகாதார பணி, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவை ஜெயந்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெயந்திக்கு நேற்று தூய்மை பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைதிகளை உறவினர்கள் வந்து சந்திக்கும் நேர்காணல் அறை பகுதியில் ஜெயந்திக்குத் தூய்மை பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது ஜெயந்தி புழல் சிறையில் இருந்து தப்பி உள்ளார். நேற்று மாலை சிறையில் வழக்கம் போலக் கைதிகளைக் கணக்கெடுக்கும் பணியின் போது பெண் கைதி ஜெயந்தி காணாமல் போனது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் ஜெயந்தியுடன் நெருக்கமாக இருந்த சிறைக் கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஜெயந்தியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்பாக சிறைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கண்காணிப்பு கேமரா,துப்பாக்கி ஏந்திய போலீஸ் என பல அடுக்கு உயர் பாதுகாப்பு கொண்ட புழல் சிறையிலிருந்து பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெண் கைதி தப்பியோடிய நேரத்தில் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலை சிறைக்காவலர் கனகலட்சுமி மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர் கோகிலா ஆகியோரை புழல் சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புழல் சிறையில் இருந்து தப்பிப்பது சாதாரணமானதல்ல.கடுமையான பாதுகாப்பு பொருந்திய சிறையில் இப்படி கைதி தப்பிப்பிக்க சிறைத்துறையை சேர்ந்த யராவது இதற்கு உதவி உள்ளார்களா?என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Share This Article
1 Review