தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக இருந்து வரும் சூழலில் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வேறு விதமான பிரச்சனை.அதற்கு அவர் கையிலெடுத்த போராட்ட முறை ஒரு வினோதம்.ஒருபக்கம் காவிரில் தண்ணீர் திறந்து விட மருக்கும் கர்நாடகாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தண்ணீர் இருந்தும் இரைக்கமுடியாமல் ஏற்பட்ட நிலை தான் இந்த விவசாயிக்கு பிரச்சனை.
பொள்ளாச்சி அடுத்த சி. மலையாண்டிபட்டணம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் விவசாயி நேற்று தோட்டத்தில் பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள் மற்றும் போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவிட்டது. இது சிறு குறு விவசாயிகளை பாதிக்கும் ஒரு உத்தரவாக விவசாயிகள் பார்க்கின்றனர்.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த சி. மலையாண்டிபட்டணம் பகுதியில் முத்துசாமி என்பவர் தோட்டத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார் மேலும் ஆடு மாடு போன்ற கால்நடைகளும் வளர்த்து வருகிறார்.அவரது தோட்டத்தில் உள்ள கிணறு பி.ஏ.பி கால்வாய்க்கும் 50 மீட்டருக்குள் இருப்பதால் இன்று மின்சார வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய கிணற்றின் மின் இணைப்பை நீதி மன்ற உத்தரவுபடி துண்டித்தனர்.
இந்த நிலையில் முத்துசாமி சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் மகன் மனோஜ் மட்டும் தோட்டத்தில் இருந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைக் கண்ட மனோஜ் ஆத்திரமடைந்து மின்சாரத்தை துண்டித்தால் மின்சார வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சென்று, தனது குடும்பம் தன்னுடைய விவசாயம் மற்றும் ஆடு,மாடு போன்ற கால்நடைகளும் முழுமையாக பாதிக்கப்படும் என்று பலமுறை எடுத்துக் கூறியும் அதிகாரிகள் கேட்காமல் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். மனோஜ் குமார் எவ்வளவு போராடியும் அதிகாரிகள் கேட்கவில்லை.

இதனால் மனமுடைந்த மனோஜ் குமார் தனது நிலத்தின் அருகே இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மின் இணைப்பு கொடுக்கும் வரை நான் கீழே இறங்க மாட்டேன், என்று கூறி மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டு போராடினார்.இதை கண்ட பலறும் அதிர்ந்தனர். அப்போது மனோஜ் குமார் பல்வேறு வசனங்களை பேசி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல்துறையினர் மின் இணைப்பு கொடுப்பதாக கூறியதால் கீழே இறங்கிய மனோஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.