யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள் – செய்தி தொடர்பாளர் டி.ஏ.ஸ்ரீகுமார்..!

2 Min Read
யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள்

களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள் ஏற்பட்டதாக தேவாலயத்தின் உள்ளூர் செய்தி தொடர்பாளர் டி.ஏ.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கொச்சியில் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று காலையில் இந்த மாநாட்டின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மாநாட்டிற்குள் சில முறை வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு மொத்தம் மூன்று இடங்களில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை பிரார்த்தனை முடிந்த உடனேயே மண்டபத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை என மூன்று முறை குண்டுவெடிப்பு நடந்ததாகவும் ஜெபக் கூடத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம், அது விபத்து அல்ல என்று காவல் டி.ஜி.பி டாக்டர் ஷைக் தர்வேஷ் சாஹேப் உறுதிப்படுத்தியுள்ளார்.

யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள்

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  இன்று காலை 9.40 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். வெறுப்பைத் தூண்டும் வண்ணம் யாரும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம்.

அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இன்றைய நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின. 9.40க்கு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் சுமார் 2500 பேர் குழுமியிருந்த மண்டபத்தின் மையப் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் அரங்கில் நின்று கொண்டிருந்தனர்.

யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள்

அடுத்தடுத்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்தது. முதல் வெடிப்புக்குப் பிறகு, மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டன. ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உடனடியாக உயிரிழந்தார். மண்டபத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Article
Leave a review