சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க கடைசி தேதி தெரியுமா?

1 Min Read
தந்தை பெரியார்

சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும். ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறாரர்.

- Advertisement -
Ad imageAd image

2023- ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடைய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2023 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 15.09.2023 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன், தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review