திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. பொய்யைச் சொல்லி திமுக ஆட்சி நடத்தி வருகிறது. திமுக ஆட்சியை மக்கள் நம்பக் கூடாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.
அதிமுக 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை நரிமேடு பகுதியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக 52 ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, 1972 அக்டோபர் 10ஆம் தேதி எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் நடித்தார்.
எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு புது கட்சியை தொடங்கினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டினார் இரட்டை இலையை சின்னமாக அறிவித்தார். தற்போது இறந்தும் இறைவனாக எம்ஜிஆர் வாழ்கிறார். எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் உழவர் மகனாக பிறந்தவர் அரசு பள்ளியில் படித்தவர். அதிமுக ஆட்சியில் 100 நாட்கள் தாண்டாது என பேசினார் மு க ஸ்டாலின். அந்தப் பேச்சுக்களை தவிர்ப்படியாக்கிவிட்டு 4 1/2 வருஷம் சிறப்பாக ஆட்சி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது இரண்டரை கோடி தொண்டர்களை அதிமுகவில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்பது போல பெண்களுக்கான உதவித்தொகை உயர்த்தி தருவேன் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள். மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்வேன். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என கூறினார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனது தந்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறினார். ஆனால் எதையும் செய்யவில்லை. மாணவி அனிதா மரணத்தை வைத்து திமுக நாடகம் ஆடினார்கள்.
நீட் தேர்வால் இதுவரை இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டு சொன்னார் செல்லூர் ராஜு, திமுக இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை. மக்கள் வரிப்பணத்தில் திமுக தலைவர் கலைஞர் இலவச டிவி கொடுத்தார். கேபிள் கனெக்சனை கொண்டு வந்து ஐந்து வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள். மதுக்கடைகளில் குவாட்டர் பத்து ரூபாய் அதிகமாக கொடுத்தால் தான் கிடைக்கும். இந்த பத்து ரூபாய் கரூர் கம்பெனிக்கு போனது தற்போது முதல்வருக்கு அந்த பத்து ரூபாய் செல்கிறது. ஊழல் செய்வதில் சிறந்த கட்சி திமுக. தற்போது விலைவாசியை கட்டுப்படுத்தவில்லை.
விலைவாசி உயர்வு அதிகரித்து மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.தற்போது எங்கு பார்த்தாலும் போதை கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்கிறோம் என காவல்துறை சொல்கிறது ஆனால் தடுக்க முடியவில்லை.திமுக கட்சிக்காரர்களே கஞ்சா விற்கிறார்கள்.மதுரைக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் திமுக செயல் படுத்தவில்லை. 1296 கோடி மதிப்பில் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு சிறப்பு திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதை 2023 நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன்.
என்னை தெர்மாகோல் என நக்கல் செய்தார்கள். அமைச்சர் துரைமுருகன் என்னை கிண்டல் செய்கிறார்.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. பெண்கள் தனிமையாக நடந்து போக முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா.பெண்களுக்கு மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் துணியை வைக்கிறார்கள் அதனால் இலவசமாக நாப்கின் வழங்கினார்.
பெண் குழந்தைகள் பன்னிரண்டாவது படிக்கும் போது இலவசமாக லேப்டாப் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.பெண் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுத்தார்.பெண்கள் பத்தாவது படித்தால் 25 ஆயிரம் ரூபாய் பட்டப்படிப்பு படித்தால் 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை கொடுத்தது ஜெயலலிதா.அதன் பின்பு பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீர்வரிசை கொடுத்தவர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும்போது சத்தான புராத பவுடர்கள் கொடுத்து 18,000 பணம் கொடுத்தார்.

குழந்தை பிறந்த பின்பு 16 வகையான பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல பெட்டியை கொடுத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்கு இலவசமாக மிக்ஸி கிரைண்டர் மின்விரிசி கொடுத்தவர் ஜெயலலிதா. வேலைக்கு பணி புரியும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்தார்.மகளிர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மகளிர் காவல் நிலையங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.பெண்கள் கமெண்ட்டோ படை கொண்டு வந்தார்.உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் ஐம்பது சதவீதம் போட்டியிட வேண்டும் என சட்டம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
நாட்டில் பசி இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் விலையில்லா அரிசி கொடுத்தார்.இது போன்ற ஏதாவது ஒரு திட்டத்தை திமுக கொண்டு வந்ததா? திமுக உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மருமகன் முப்பதாயிரம் கோடி ஊழல் செய்தார்கள் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். செந்தில் பாலாஜியை ஊழல் செய்ததற்காக அமலாக்கத்துறை கைது செய்தது. அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
எங்கள் அண்ணன் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மது ஆலைகளை மூடி விடுவோம் என கனிமொழி பேசினார். தற்போது இவர்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் இறந்து விட்டார்கள்.பொய்யாக சொல்லி தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. திமுக ஆட்சியை மக்கள் நம்பக் கூடாது. விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது.