கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் நேற்று இரவு இருவரையும் திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். பாலகிருஷ்ணன் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் திருடப்பட்ட வாகனங்களை அடமானமாக வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன திருட்டு விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த அமைப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது