கழிவுநீரில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு – கன்றுகுட்டியை கடித்து கொன்ற நாய்கள்..!

2 Min Read
கழிவுநீரில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு

கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அந்த பகுதியில் திறந்த வெளி சாக்கடைகள் உள்ள பகுதி இங்குள்ள கழிவுநீர் சாக்கடையில் சிக்கிய பசுமாடு கன்று குட்டியை  ஈன்று, தவித்துக் கொண்டிருந்தது. யாரும் காப்பாற்ற முன் வரவில்லை நீண்ட நேரம் போராடி உயிரைவிட்டது. தனியாக கத்திய கன்றுகுட்டியை கடித்து கொன்ற நாய்களால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில், கழிவுநீர் சாக்கடை செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையில் நேற்று தெரியாமல் இறங்கிய பசுமாடு, இந்த கழிவு நீர் சாக்கடையில் சிக்கி கொண்டது.இந்த கழிவு நீர் சாக்கடையில் இருந்து வெளிவர முடியாமல் அதிக நேரம் தவித்த நிலையில் இருந்த பசுமாடு தீடிரென்று கன்று குட்டியை ஈன்றது.

இறந்த கன்றுகுட்டியை எடுக்கும் தீயணைப்புப் படையினர்

ஆயினும் அந்த பகுதியில் கழிவு நீர் சாக்கடையில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி கொண்ட பசுமாடு கழிவு சாக்கடை நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் பிறந்த கன்றுக்குட்டியை கடித்து கொன்றது. இதனை அங்கு கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து அப்பகுதியின் கவுன்சிலர் சாந்தி சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த அப்பகுதி கவுன்சிலர் சாந்தி, இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கழிவுநீர் சாக்கடையில் இறங்கி கயிறுகட்டி உயிரிழந்த மாட்டையும்,நாய்கள் கடித்த கன்றுக்குட்டியையும் மேலே கொண்டு வந்து வடவள்ளி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கழிவு நீர் சாக்கடையில் சிக்கி கொண்ட பசுமாடு கயிறு கட்டி இழுக்கும் தீயணைப்புப் படையினர்

அப்போது வடவள்ளி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி மேற்பார்வையாளர் முத்து ராஜ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு,பின்னர் அதே பகுதியில் குழி தோண்டி பசுமாட்டையும், கன்றுக்குட்டியையும் புதைத்தனர், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்ற திறந்த வெளி கழிவுநீர் கால்வாய்களால் உள்ள ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்பட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share This Article
Leave a review