படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும், சினிமா அதுதான் எதிர்பார்க்கிறது – நடிகர் சந்தானம்

2 Min Read
நடிகர் சந்தானம்

கோவை மாவட்டம், ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் கல்லூரியில் பொதுமக்கள் அனைவரும் பயனடையும் விதமாக உணவு அரங்குகள் துவங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உணவருந்தி கொண்டே இங்கு பயிலும் கல்லூரி மாணவர்கள் சினிமா மீடியா துறை சம்மந்தமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான ஏற்பாடுகளை கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இதனை நடிகர் சந்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சந்தானம், கிளஸ்டர் கல்லூரியில் சினிமா மீடியா துறை சம்பந்தப்பட்ட படிப்புகளை நடத்தி வருகின்றனர்.அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கு தினந்தோறும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நடிகர் சந்தானம்

இங்கு உணவு அருந்த வரும் போது பொழுதுபோக்கு அம்சமாக ஏற்படுத்தி உள்ளனர்.நான் படிக்கும் போது ஒரு கேண்டின் தான் இருக்கும் அந்த கேண்டினில் வேலை செய்பவர் அழுக்கு உடையுடன் போட்டுக்கொண்டு ஒருவர் இருப்பார்.அவர்தான் கேண்டின் சமைப்பாளர் ஆவார். அந்த கேண்டினில் அவர் தான் ஓனர்,அவர்தான் சப்ளையர், காலேஜில் அவர் போடுவது தான் சாப்பாடு, நாம் எதுவும் கேட்க முடியாது.

அந்த மாதிரியான காலகட்டத்தை இங்கு மாற்றியுள்ளனர்.இதை கோயம்புத்தூரில் செய்துள்ளார்கள், இங்கு வரக்கூடிய மக்கள் நல்ல உணவை அருந்துவார்கள், இப்போது உள்ள உலக காலகட்டத்தில் குக் பண்ணி சாப்பிடுவதை விட, ஆன்லைன் மூலம் புக் பண்ணி சாப்பிடுவது தான் அதிகமாக உள்ளது.கோவை மக்கள் ரொம்ப அன்பானவர்கள், குசும்பானவர்கள், நான் காமெடி பண்ணுவதால் கோவை மக்களுடன் ஒரு தொடர்பு இருக்கிறது, என்றார்.

தனக்கு பிடித்தமான உணவு சாம்பார்,உருளைக்கிழங்கு பிரை அதுதான் பிடிக்கும். முக்கியமாக முந்தைய காலத்தில் கல்லூரி மானவர்கள் கேண்டினில் எதிர்த்து எதுவுமே கேட்க முடியாது. அப்போ ரஜினி,ஜெயிலர், மாதிரி பேசுவார்கள்.கேண்டினில் நான் வைக்கிறது தான் சாம்பார் சாதம், கப்பு சுப்பனும் போயிரனும் என்று,கேண்டனில் சப்ளேயர் கூறுவார். உணவு என வந்தாலே 90% யூடுபில் அதனை போட்டு, லைக்,கமண்ட் வாங்குவதற்கு தான் உண்வு சாப்பிடுகிறார்கள்.

நடிகர் சந்தானம்

வருங்கால படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும், சினிமா மீடியா துறை அதுதான் எதிர்பார்க்கிறது.என்னுடைய காமெடி நடிப்பில் 80ஸ், 90ஸ், பில்டப், வடக்குப்பட்டி ராமசாமி அடுத்தடுத்த படங்கள் வர உள்ளது.என நடிகர் சந்தானம் தெரிவித்தார்.

Share This Article
Leave a review