களிமண் குளிர்சாதன பெட்டி- 7 நாட்கள் வரைக்கும் கெட்டுபோகமல் இருக்கும் காய்கறிகள். அசத்தல் கண்டுபிடிப்பு

3 Min Read
மன்சுக்பாய் பிரஜபதி

இப்போதெல்லாம் மின்சார குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம் வீட்டில் உள்ள மீந்து போகும் பொருட்களை எல்லாம் பாதுகாக்கும் பெட்டகமாக குளிர்சாதன பெட்டி விளங்கி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

அவற்றுக்கு மாற்றாக இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்ட மின்சாரம் இல்லாத குளிர்சாதன பெட்டியை தயாரித்து வழங்கி வருகிறார் ஒரு இயற்கை ஆர்வலர். அதை மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.மின்சாரம் இல்லாமல் இயற்கையான பழங்கால வாழ்வியல் முறையை பின்பற்றி மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு குஜராத்  மாநிலத்தை சேர்ந்த மன்சுக்பாய் பிரஜபதி என்பவர் களிமண்ணால் குளிர்சாதன பெட்டியை கண்டிபிடித்துள்ளார்.

மன்சுக்பாய் பிரஜபதி

இந்த  மிட்டி கூல் எனும் குளிர்சாதன பெட்டி மின்சாரம் இல்லாமல் இயங்குகிறது, வளரும் நாடுகளில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு மலிவு விலையில் குளிரூட்டும் மாற்றாக செயல்படுகிறது.‌‌‌இது மின்சாரம் அல்லாத குளிர்சாதன பெட்டியாகும்.

இது நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே குளிர்விக்கப்படுகிறது. களிமண் குளிர்சாதனப் பெட்டியின் மேல் அறை, குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டில் மெதுவாகச் சொட்டி ஆவியாகி நீரை சேமிக்கப் பயன்படுகிறது.‌‌இந்த ஆவியாதல் கணிசமான குளிரூட்டும் விளைவை உருவாக்க சுற்றுப்புறத்திலிருந்து ஆற்றலை ஈர்க்கிறது.

உள்ளே இருக்கும் சேமிப்பு அறைகளில் இருந்து வெப்பத்தை அகற்றி அவற்றை குளிர்ச்சியாக வைக்கிறது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் வைத்திருக்க முடியும் என்கின்றனர்.‌‌குளிர்சாதன பெட்டி.

இது வெள்ளை களிமண்ணால் ஆனது மற்றும் வழக்கமான பராமரிப்பு தேவையை நீக்கும் ஒரு எளிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மின்சாரம் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில், களிமண் குளிர்சாதன பெட்டி நம்பகமான குளிரூட்டும் சேமிப்பு விருப்பத்தை வழங்குகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மையமாக கொண்டுள்ளது.

‌‌இது இந்தியாவில் முதன் முதலில் களிமண்ணால் செய்யப்பட்ட இயற்கை குளிர்சாதன பெட்டியாகும்.‌‌இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருட்களை தனது சிறு வயதில் இருந்து  செய்து மலிவு விலையில் கொடுத்து வருகிறார்.தற்போது இந்த குளிர்சாதன பெட்டியை ஆர்வமுடன் மக்கள் வாங்கி செல்வதாக கூறுகிறார்.‌‌மேலும் இந்த குளிர்சாதன பெட்டி குறித்து அவர் கூறுகையில் தினமும் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் பல பொருட்களை வைத்துக் கொள்ளலாம். உள்ளே வைக்கும் காய்கறிகள் பழங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும்.

10 லிட்டர் குளிர்ந்த தண்ணீரை சேமிக்க முடியும். மருந்து பொருட்களும் பாதுகாக்க வைக்க முடியும். பராமரிப்பு செலவு இல்லை மின்சார குளிர்சாதன பெட்டியை விட பல மடங்கு ஆரோக்கியமானது. இதில் வைத்து சமைப்பதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் உயர்வடைகிறது.களிமண் குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைக்கும் என்கின்றனர். கொரோனாவிற்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டு இருந்தாலும், தற்போதுதான் விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் , நம்மூரில் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்க யோசித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஆடர்கள் வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு ஒன்றின் விலை 8 ஆயிரத்து 500 லிருந்து விற்பனை செய்து வருவதாகவும் , உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்.

‌‌

Share This Article
Leave a review