சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் – தொல். திருமாவளவன்..!

2 Min Read

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொல் திருமாவளவன் எம்பி கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நேற்று சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

- Advertisement -
Ad imageAd image

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணி உருவாவதற்கு சில ஆண்டுகளாக கணிசமான பங்களிப்பு செய்துள்ளது. இந்தியா வெல்லும் இந்திய கூட்டணி வெல்லும் என்கிற அடிப்படையில் வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாட்டை அடுத்த மாதம் டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அகில இந்திய அளவில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தும், மாநாடாக இந்த மாநாடு இருக்கும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.

தொல். திருமாவளவன்

தமிழ்நாடு அரசு அனுமதிக்காத போதிலும் ஓ.என்.ஐ.சி நிறுவனம் மூலமாக மீண்டும் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. சிதம்பரம் வட்டத்திலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் முயற்சியை ஓ.என்.ஐ.சி நிறுவனம் மேற்கொள்வதாக தெரிகிறது. முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் என்ற பெயரில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பேராசிரியர்கள் பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையே வரவேற்கிறோம்.

ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் எஸ்.சி.எஸ்.டி பேராசிரியர்கள் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ்.சி.எஸ்.டி பேராசிரியர்கள் பணியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்தியலுக்கு எதிரானதாக அமையும். எனவே பணி நிரவல் நடவடிக்கை மேற்கொள்ளும் பல்கலைக்கழக நிர்வாகம் சமூக நீதியை கருத்தில் கொண்டு திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடத்த உள்ளம்.

தொல். திருமாவளவன்

அண்ணாமலை நடைபயணத்தில் அ.தி.மு.க பா.ம.கவை சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். அண்ணாமலையோடு நடந்து செல்பவர்கள் பாரதி ஜனதா தொண்டர்கள் இல்லை. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எனது சொந்தமான தொகுதியாகும். இந்தத் தொகுதியை நேசிப்பவன் நான். எனவே சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவே.ன் அவ்வாறு அவர் கூறினார். அப்போது சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ மாவட்ட செயலாளர் அவர்கள் தமிழ் ஒளி, மணவாளன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review