தங்களிடம் நிர்வாண கண்ணாடி உள்ளதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நன்கு பேர் கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர் .
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதி அறையில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
முன்னாள் நிற்பவர் ஆடை அணிந்து இருந்தாலும் நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே மேஜிக் கண்ணாடி விற்பனைக்கு இருப்பதாக கூறி இலட்சக்கணக்கில் பணம் பறித்த சதுரங்க வேட்டை மோசடி கும்பலை கோயம்பேடு ஓட்டலில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பல வருடங்களுக்கு முன் வெளியான நெற்றிக்கண் மற்றும் பூவே பூச்சூடவா படங்களில் எதிரில் நிற்பவர்கள் ஆடை அணிந்து இருந்தாலும் அவர்களை நிர்வாணமாக பார்க்கும் கண்ணாடி இருப்பதாக சில காட்சிகள் இடம் பெற்று இருக்கும். உண்மையில் அப்படிப்பட்ட கண்ணாடிகள் ஏதும் இல்லாத நிலையில் மகத்துவம் வாய்ந்த எக்ஸ்ரே மேஜிக் கண்ணாடிகள் தங்களிடம் விற்பனைக்கு இருப்பதாக பணம் கொழுத்த செல்வந்தர்களை வலையில் சிக்க வைத்து லட்சங்களை பறித்த கும்பலில் ஒன்று கையும் களவுமாக போலீசில் சிக்கி உள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவசூரியா என்பவர் தன்னிடம் மோசடியாக 6 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு துப்பாக்கியை கொண்டு மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார்.
கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த பெங்களூர் சேர்ந்த சிவசூர்யா மற்றும் கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து, இஷாத் ஆகிய நான்கு போரையும் போலீசார் சுற்றிவளைத்தனர்.
மேலும் அவர்கள் அறையில் இருந்த கைதுப்பாக்கி,தோட்டாக்கள் இரண்டு செம்பு கலசங்கள், டம்மி நாணயங்கள், கருப்பு நிற அரிசி, கை விலங்கு, சங்கிலி பூட்டுகள் மற்றும் கண்ணாடி பொருட்களை கைப்பற்றினர்.
இந்த கும்பல் தங்களிடம் விலை உயர்ந்த மேஜிக் கண்ணாடி விற்பனைக்கு இருப்பதாகவும் கிடைப்பதற்கு அரிய அந்த கண்ணாடிகள் அணிந்து பார்த்தால் பெண்கள் ஆடை அணிந்து இருந்தாலும் ஆடை இன்றி நிர்வாணமாக தெரிவார்கள் என ஆசை வார்த்தை கூறி அதனை வாட்ஸஅப்ப் மற்றும் சமூக வலைத்தளங்களின் பரப்பி நம்ப வைத்துள்ளனர்.
தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடம் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்கு வரவழைத்து கண்ணாடியை கையில் கொடுத்து போட்டு பார்க்க சொல்வார்கள் என்றும் , வந்தவர்கள் அதனை ஆவலுடன் அணிந்து பார்க்கும் போது ஒன்றும் தெரியாது என்றும் கூறப்படுகிறது.
அப்போது அதனை வாங்கி சரி செய்வது போல் நடித்து மீண்டும் கண்ணாடியை போட்டு பாருங்கள் என்று கையில் கொடுப்பது போல் கண்ணாடி கீழே போட்டு உடைத்து விட்டு ,வந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் இந்த கும்பல் பணத்தை கொடுக்க மறக்கும் நபர்களிடம் இதோ காவல் அதிகாரி வர வைக்கிறோம் என்று கூறி செல்போனில் தகவல் தெரிவித்ததும் வெளியில் இருக்கும் இந்த மோசடி கும்பலை சேர்ந்த இருவர் போலீசை போல உள்ளே வருவார்கள் என்று கூறப்படுகிறது.
பின்னர் துப்பாக்கி மற்றும் கை விலங்குகளை காண்பித்து கைது செய்து விடுவதாகவும் பெண்களை நிர்வாணமாக பார்க்க நினைத்தவர்கள் தானே என்று அச்சுறுத்தி பணத்தைப் பறித்து வந்தது தெரிய வந்தது.
இதனை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று பணத்தைக் கொடுத்துவிட்டு சென்ற சிலர் புகார் அளிக்கவில்லை என்றும் நாகராஜன் ஆறு லட்ச ரூபாயை பறிகொடுத்ததால் போலீசில் புகார் அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மோசடி கும்பலை சேர்ந்த நாலு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த பிளாக் மெயில் கும்பல் பயன்படுத்தியது சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி மற்றும் கை விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது .