- பழமைவாய்ந்த ரெங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் பிரம்மோற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெருவில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆராதனை செய்யப்பட்டது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்திலேயே மருத்துவக் குழுவினர் முகாமிட்டு பக்தர்களுக்கு மருத்துவ வசதி செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் புரட்டாசி. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் இந்த புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.
பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும்.
தனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்.
அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.
புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் கூறுகிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, நல் வாழ்க்கையை பெறலாம்.ஒவ்வொரு சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை மேற்கொள்ள் முடியாதவர்கள் புரட்டசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து வழிபடுவதோடு, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிட்டும்.
சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதன். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோயிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தான்.