தக்காளி விற்பனைக்கு பவுன்சர் பாதுகாப்பு!!

2 Min Read
பவுன்சர்கள்

நாளுக்கு ஒரு விலை எப்போது குறையும் என்ற ஏக்கம் மக்களை வாட்டி வரும் தக்காளிவிலை காரணமாக, அதிகம் கேள்விப்பட்டிராத வினோதங்கள் பலவும் அரங்கேறி வருகின்றன.இன்னும் என்ன நடக்கப்போவுதோ?

- Advertisement -
Ad imageAd image

கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை குறைவதுபோல போக்குக்காட்டியதக்காளி விலை மீண்டும் ஏறுமுகம்கண்டுள்ளது. தக்காளி விலையின் தாக்கம் அதிகரித்திருக்கும் வட மாநிலங்களில் அதையொட்டியவினோதங்களும் அதிகரித்துள்ளன.கடந்த சில காலங்களாக எதை கண்டாலும் ஆச்சரியமாக பார்க்கும் போக்கு நிகழ்ந்து வருகிறது.

மத்தியபிரதேசம்மாநிலத்தில் ஸ்மார்போட் விற்பனை கடைகள் இலவச இணைப்பாக தக்காளிவழங்கி வருகின்றன. அசோக் நகரில் அபிஷேக் அகர்வால் என்பவர் ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என அறிவித்தார். இதனையடுத்துஇதர ஸ்மார்ட்போன் கடைகளும் தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உத்திரபிரதேசம்மாநிலத்தில் பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், அஜய் ஃபாஜி என்றதக்காளி வியாபாரி தனது தக்காளி கடைக்குபவுன்சர்களை பாதுகாப்புக்கு நிற்க வைத்திருக்கிறார். வழக்கமாக விஐபிக்களின் பாதுகாப்புக்கு என ஏற்பாடாகும் இந்தபவுன்சர்கள், காலத்தின் கோலத்தால் தக்காளி கடை வரை இறங்கிவந்திருக்கின்றனர்.விலையேற்றத்திலும் ஒரு விளம்பரம் தான் எவ்வளவு நாள் நீடிக்குமோதெரியவில்லை இந்த விலையேற்ற நிகழ்வு.

பவுன்சர்கள்

உபியில்தக்காளி விலை ரூ160க்குமேல் அதிகரித்திருப்பதால், நல்ல தக்காளிக்கு தட்டுப்பாடும்நிலவுகிறது. இதனால் தக்காளியை பதம் பார்த்து பொறுக்குவோர், பேரம் பேசுவோர், ஓரிரு தக்காளியை கமுக்கமாய் அமுக்கிச் செல்வோர் என எழுந்த பிரச்சினைகளைசமாளிக்க பவுன்சர்களை நியமித்திருப்பதாக அஜய் ஃபாஜி தெரிவித்திருக்கிறார். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என்பதால், மிகைப்படுத்தி விளம்பரம் சேர்க்கிறார் என்று சிலர் குற்றம்சாட்டினாலும், தக்காளி விலைவாசி உயர்வை ஒட்டிய நிதர்சன பிரச்சினைகளை எவரும் மறுக்கவில்லை.

கடந்த சில நாட்களாக தக்காளி விலையில்லை எனவே ஆற்றில் கொட்டுவது,நீர்நிலைகளில் கொட்டுவது என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலை மாறி தற்போது கடுமையான விலையேற்றத்தில் குதிரை வேகத்தில் செல்லுகிறது தக்காளி.தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விலையில் தக்காளி விற்க்கப்படுகிறது.அரசு என்னதான் நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்தாலும் விலை குறைவுதான் இதற்கு ஒரே வழி என்கின்றனர் வியாபாரிகள்.

எதிகாலத்தில் தக்காளி உற்பத்தியில் விவசாயிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையே இந்த விலையேற்றம் சொல்லுகிறது. எகிறும் தக்காளிவிலை இன்னும் என்னென்ன விசித்திரங்களை வெளிப்படுத்துமோ தெரியவில்லை.

Share This Article
Leave a review