தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது – நாராயணன் திருப்பதி

3 Min Read
நாராயணன் திருப்பதி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காரணமாக அமைவதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியதாவது,”திருக்கழுக்குன்றத்தில் நடு ரோட்டில் மசூதி தெருவை சேர்ந்த சர்புதீன் என்பவரை வெறிபிடித்த காட்டுமிராண்டி கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திருக்கழுக்குன்றம் 10 வது வார்டு, அறிவாலயத்தின் கவுன்சிலர் ‘தெளலத் பீவி’ குடும்பத்தினர் தான் இப் படுகொலையின் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தவுலத் பீவியின் மகன் தி மு கவில் முக்கிய நிர்வாகியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது, ரியல் எஸ்டேட் அராஜகம், கட்ட பஞ்சாயத்து என தொடர்ந்து சட்ட விரோத செயல்களை செய்து வரும் தி மு க கவுன்சிலரின் குடும்ப அராஜகங்களைதொடர்ந்த காரணத்தினால் கொடூரமான முறையில்  படுகொலை செய்துள்ளது தெரிய வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நாசகார கும்பலை தட்டி கேட்ட பாஜக வை சேர்ந்த தனசேகரை படு கொலை முயற்சித்து கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கிற,பொது மக்கள் முன்னிலையில் நடு ரோட்டில் நடைபெற்றுள்ள இந்த படுகொலை, தங்களை கேட்க யாரும் இல்லை என்ற அகம்பாவத்தில், அதிகார திமிரில் அரங்கேற்றப்பட்டிருக்கிற கொடூர சம்பவம். ஏற்கனவே, இந்த குடும்பத்தின் அராஜகங்களை அறிந்தும் காவல்துறை  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த குரூர கொலை நடந்ததற்கு காரணம். பாஜக தனசேகர் தாக்கப்பட்ட கொலை முயற்சி வழக்கில் பிணையில் உள்ள தி மு க நிர்வாகியே இந்த படுகொலைக்கு காரணம் என்பது ‘தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்ற ஆளும் கட்சியினரின் மமதையை, அதிகார பலத்தை வெளிப்படுத்துகிறது.

தி மு க வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காரணமாக அமைவதை தமிழக அரசும், காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திட்டமிட்ட இந்த  படுகொலை குறித்து நுண்ணறிவு பிரிவு எச்சரிக்கை செய்யாமல் இருந்திருந்தால், அது அப்பிரிவின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. எச்சரித்திருந்தால் சட்டம் ஒழுங்கு பிரிவின் தோல்வியை பறை சாற்றுகிறது. ஒரு குற்றத்தை அரங்கேற்றிவிட்டு பிணையில் வெளிவந்து ஒரு கொலையை அரங்கேற்றியிருப்பது ‘ஆளும் கட்சி திமிர்’ அன்றி வேறில்லை. தி மு க வின் கவுன்சிலர்களால் எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் தமிழ் மக்கள். ஆளும் கட்சியினரின் ஆணவத்தால், ஆளும் கட்சியின் அதிகார பலத்தால், ஆளும் கட்சியினரின் பேராசையால் நாசமாகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

நாராயணன் திருப்பதி 

சமூக விரோதிகளை,கொலை வெறிபிடித்த அயோக்கியர்களை,ரௌடிகளை, கட்ட பஞ்சாயத்து காலிகளை,சட்ட விரோத தீய சக்திகளை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகரிப்பது தொடர்கதையாகி வருகிற நிலையில், காவல்துறை இது போன்ற தீய சக்திகளை உலவ விடுவது பெரும் கேட்டை விளைவிக்கும். ஆளும் கட்சியின், அரசியல்வாதிகளின் தலையீட்டால் தான் காவல்துறை மெத்தனமாக செயல்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், மனசாட்சி உள்ள காவல்துறையினர், அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தங்கள் கடமையாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையோடு ‘பாரத்தை அண்ணாமலையில் போட்டு’  உயிரை கையில் பிடித்து கொண்டு தெருவில் நடமாடி கொண்டிருக்கின்றனர் தமிழர்கள்.

இது தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் திராவிட மாடலோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review