தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி கைது.

1 Min Read
ஜெயக்குமார்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சார்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார் 32 இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார் இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவதூறு பரப்பி வந்ததாக நெல்லையைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த நெல்லை போலீசார் கடலூர் மாவட்டத்திற்கு ஜெயக்குமாரை தேடி வந்தனர். அப்பொழுது நெல்லையில் இருந்து வந்த போலீசார் கடலூர் போலிசாரின் உதவியை நாடினர்.நெல்லை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீசார் இணைந்து புவனகிரி பகுதிகளில் தேடி வந்தனர்.

அப்பொழுது புவனகிரி அருகே உள்ள பாளையத்தில் ஜெயக்குமார் சுற்றி திரிவது போலீசாருக்கு தெரிய வந்தது மேலும் அவரை கைது செய்து நெல்லைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.என்ன நோக்கத்திற்காக தமிழக முதல்வர் குறித்து அவதூறு தகவல்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review