பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

2 Min Read
பல்வீர் சிங்

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட 8-க்கும் மேற்பட்டோர்கள் தங்களுடைய பற்களைப் பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வந்தார் அவருடைய விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் சென்று விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து இந்த புகாரை மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்தினார். கடந்த 10 ஆம் தேதி அமுதா ஐஏஎஸ் விசாரணையைத் தொடங்கினார். அப்போது பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதன் பின்பு ஒவ்வொருவராக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். அமுதாவின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, “அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் அலுவலர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய புகார் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் புலன் விசாரணையில் உள்ளது. மேலும் அமுதா ஐஏஎஸ்  தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விசாரணை இனி குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை துறையால் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்புடைய அனைத்து குற்ற வழக்குகளும் சிபிசிடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review