வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆவனிமாத பிரதோஷ விழா. திரளான பக்தர்கள் பங்கேற்று சிவனை வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.பிரதோஷ விழாவை முன்னிட்டு வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.விழாவின் சிறப்பம்சமாக நந்தீஸ்வரருக்கு பால், தேன், பன்னீர், தயிர்,விபூதி, சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க தையல்நாயகி சகிதமாக வைத்தியநாத சுவாமி மூன்றுமுறை பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பிரதோஷ விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர்.
வெம்பாக்கம் இராமநாதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் இராமநாதஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.