மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம் மேலும் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் அமுமுக சார்பில் அந்த பகுதி மக்கள் விவசாயிகளோடு இணைந்து அந்த முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்.
தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையே தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்பதுதான். மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம் அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை அதுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிலைப்பாடும் அதுதான். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம் மேலும் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் அமுமுக சார்பில் அந்த பகுதி மக்கள் விவசாயிகளோடு இணைந்து அந்த முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் கார்த்திகேயன் மலேசியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கினார். அவர் மேலும் விளையாடுவதற்கான அனைத்து உதவிகளையும் அம்மா முன்னேற்றக் கழகம் செய்யும் எனவும் தெரிவித்தார்.
மோடி இபிஎஸ் ஓபிஎஸ்யை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை அதில் கருத்து சொல்வது நல்லதாக இருக்காது என்றார்.