புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பு

1 Min Read
எடப்பாடி மோடி

புதுடில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை விடுத்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த நிலையில், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க உள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த திறப்பு விழா குறித்து அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

தம்பி துறை சி.வி சண்முகம்

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அதன் எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்வில் பங்கேற்கிறது.

அதேபோல தேசிய அளவில் ஷிரோன்மணி அகாலி தளம், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, சிராக் பஸ்வானின் லோக் ஜனநாயக கட்சி பங்கேற்கின்றன.

Share This Article
Leave a review