ஒப்பந்த காலம் முடிந்தும் எனது விளம்பரங்களை பயன்படுத்துகிறார்கள் – உயர் நீதிமன்றத்தில் நடிகை தமன்னா .!

2 Min Read
பிரபல நகைக்கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு

பிரபல நகை கடை நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்க அந்த நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பிரபல நகைக்கடை நிறுவனமான அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்ட தனது விளம்பரத்தை அந்த நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் அட்டிகா கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

நடிகை தமன்னா

இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவிற்கு பிறகும் தனது விளம்பரத்தை அட்டிகா கோல்டு நிறுவனம் பயன்படுத்துவதாக கூறி தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகைக்கடை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார், தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும் ஆனால் வாட்ஸ் அப் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் எங்களின் பழைய விளம்பரங்களை தனிநபர் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிட்டார்.

இதனை அடுத்து மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல் பவர் சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகை தமன்னா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதரார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு நீதபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Share This Article
Leave a review