10 மாடுகளைப் பிடித்து முதலிடம் வந்த அபி சித்தர்!

2 Min Read
அலக்காநல்லூர்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்து வந்த முதன்முறையாக ஜல்லிக்கட்டுக்கு என கிரிக்கெட் மைதானம் போல பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கியது.இதனையொட்டி வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுபொருள் மாடம் மற்றும் இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் முடிவடைந்து போட்டி தொடங்கியது.

- Advertisement -
Ad imageAd image
முதல்பரிசு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிகட்டு அரங்கத்தில் இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அபி சித்தர் முதலிடம் பிடித்தார். இவர் பத்து காளைகளை அடக்கி இருந்தார்.ஜல்லிக்கட்டு வீரர் அபிசித்தருக்கு, ₹.1 லட்சம் ரொக்கம் மற்றும் மஹிந்திரா கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ரூ. 62 கோடியே 78 லட்சம் மதிப்பில் ஏறு தழுவுதல் அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.

இதனைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜனவரி 24, 2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் அபி சித்தர் முதலிடம் பிடித்தார். அலங்காநல்லூர் போட்டியில் இவர் இரண்டாம் இடம் வந்திருந்தார். அப்போது போட்டியில் சில குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அமைச்சரும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், போட்டியில் வென்றது குறித்து பேசிய அபி சித்தர், “இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றே நான் எனது பெயரை பதிவு செய்தேன்.எனக்கு பலரும் பக்க பலமாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் எனது பெயரையே பதிவு செய்தேன்” என்றார்.

போட்டியில் வென்ற அபிசித்தருக்கு, ₹.1 லட்சம் ரொக்கம் மற்றும் மஹிந்திரா கார் பரிசாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a review