பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீஸ்.

2 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு  சென்னை கொளத்தூரை சேர்ந்த யுவராஜ் 32, பாலாஜி 24 ஆகிய இருவரும்  வீட்டினை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகை அந்த வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு சென்றுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த புகாரை விசாரித்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான போலீசார் 24 ஆம் தேதி சம்பவம் நடந்த வீட்டினை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் திருடிய காருடன் சென்னையில் இருப்பதாக தகவல் தெரிந்தது.இதனை அறிந்து மூன்று தனி படை போலீசார் அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி தலைவாசல் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து மூன்று தனிப்படை போலீசார் நேற்று இரவு முதல் குற்றவாளிகளின் காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
வரும் வழியில் தலைவாசல் மற்றும் உள்ளிட்ட இரண்டு டோல்கேட்டுகளை உடைத்துக் கொண்டு தப்பித்து தியாகதுருவம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டை தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு வந்துள்ளனர்.

குற்றவாளிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், முருகன் ஆகியோர் பண்ருட்டி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை புறவழிச் சாலை வழியாக செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் திருவண்ணாமலை போலீசார் சினிமா பாணியில் தடுப்புகள் அமைத்து லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களை வழியில் குறுக்கே நிறுத்தி துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளிகளின் காரை மறைக்க பிடித்துள்ளனர்.

போலீசாருக்கு பாராட்டு

காருக்குள்ளே இருந்த குற்றவாளிகள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று குற்றவாளிகளை கைது செய்து துணிச்சலுடன் தைரியமாக செயல்பட்ட போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் இருவரையும் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி பின்னர் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் இரண்டு குற்றவாளிகளை மடக்கி பிடிக்க உறுதுணையாக பல்வேறு வகையில் செயல்பட்ட காவல்துறையினரை திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்ததுடன் அனைவருக்கும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்

Share This Article
Leave a review