திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு.!

2 Min Read
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு.

மாணவ மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவு. மீண்டும் அதே இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான நடவடிக்கையும் துவங்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அரசுக்கு அபராதம் விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு.

- Advertisement -
Ad imageAd image

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் 5 வகுப்பு வரையில் உள்ளது இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறை போதிய விளையாட்டு மைதானம்,காலை மற்றும் மதிய உணவுகளை மாணவ மாணவிகள் உட்கொள்வதற்கு கூட போதுமான இட வசதி இல்லை .

70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் , கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வாய்ப்புள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருவதால் பெரும் அசம்பாவிதம் உயிர் சேதம் ஏற்படும் முன் கட்டிடத்தை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு மனு அளித்து இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சூழல் கருதி நீதிமன்றம் இந்த பள்ளியை இடித்து அப்புறப்படுத்தி புது பள்ளி கட்டி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது ,அப்போது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் உள்ள நிலையில் மாணவ மாணவிகள் பயின்று வரும் புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைப் பார்த்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை பன்னிரண்டு வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த அபராத தொகை அடையார் புற்றுநோய் காப்பக மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்கள்.

Share This Article
Leave a review