இஸ்லாமிய சமுதாயத்தினரை அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகர் முன் ஜாமீன் தாக்கல் .!

2 Min Read
சென்னை உயர்நீதிமன்றம்
  • இஸ்லாமிய சமுதாயத்தினரை அவதூறாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பிரமுகர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.

இனி இது போன்ற பதிவுகளை பதிவிட மாட்டேன் என்றும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவேன் என உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட – உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சி பிரமுகர் கதிரவன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம் அதியமான் பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் இஸ்லாமிய பொது கூட்டம் நடைபெற்றது இதனை அவதூறாக முகநூல் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சார்ந்த முகமது ஹாலிக் என்பவர் கொடுத்த புகாரில் என் மீது மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் – மனுதாரர் மத மோதல்களை தூண்டும் விதமான பதிவுகளை செய்துள்ளார், இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதே போல் புகார் கொடுத்தவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கலந்தார் ஆசிக் மனுதாரர் இஸ்லாமிய சமுதாயத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்து பதிவிட்டுள்ளார் எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இது போன்று இரண்டாவது தடவையாக பதிவிட்டுள்ளார் மனுதாரர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவும் உள்ளார் எனவே இது போன்ற பதிவுகளை இனி பதிவிட மாட்டேன் என்றும் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறி கொள்வதாக உத்தரவாத பத்திரத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மனுதாரருக்கு மேலும் பல நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Share This Article
Leave a review