நீலகிரி மாவட்டம், குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 77வது ஆண்டு காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர்களுக்கு ஆயுதங்கள் கையாளுவது பற்றி விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி முதல் காலாற்படையினர் ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் போரில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடம் இருந்து ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கை கைபிடிலிருந்து மீட்டனர். இந்நாளில் மகாராஜா ஹரி ,சிங் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ந்தது தொடர்பாக இணைக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டார்.

நமது காலாட்படையின் போரில் நுட்பமாக கையாண்டனர். இந்த வீரச்செயலை இந்திய இராணுவ விரர்கள் போற்றும் வகையில், வருடம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாற்படை தினம் அந்நாளில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காலாட்படை இராணுவ விரர்களுக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், இன்று 77 வது ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில்,இந்திய ராணுவ தளத்தில் இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி விழாவில் காலாட்படை இராணுவ தலைவா் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், இந்திய ராணுவப் படை, இந்திய விமான படை , இந்திய கப்பல் படை அதிகாரிகள் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி ராணுவ விரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.பின்பு அதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகள் இராணுவ விரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி விழாவில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் , இந்திய ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு,போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, ஆயுதங்கள் கையாளுவது குறித்து விளக்கப்பட்டது.