இமாச்சலப்பிரதேசத்தில் 765 சாலைகள் மூடல்- 6 பேர் மீட்பு-தொடர் மழை

2 Min Read
இமாச்சலபிரதேசம் மழை

இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகி வருகின்றனர்.மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பரவலான சேதம் ஏற்பட்டது.இதனை சரி செய்யும் விதமாக மநில அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சுமார் 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மண்டியின் துனாக் பஜாரில் மலைகளில் இருந்து சாலையில் மழைநீர் ஓடுவதைக் காட்டும் புதிய வீடியோ இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

வெள்ளக்காடான பகுதிகள்

மாநிலத்தின் பல பகுதிகளில் மழையின் பாதிப்பு சொல்லமுடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.மண்டி மாவட்டத்தின், ஓநார் கிராமத்தில் உள்ள துனாக் பஜாரில் சேற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட பெரிய மரக் கட்டைகள் இதனால் பல வீடுகள் மற்றும் கடைகளை சேதமாகின. துனாக் பஜாரில் நடந்த இந்த பயங்கர காட்சியை படம்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோ மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான மழைக்கு மத்தியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமத்தில் பெரிய தண்டுகள் மோதியதால் பல மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலை மூடப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பத்திரமாக இருக்கவும் அம்மாநில  முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு 

மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை பாதுகாக்க வேண்டும் மேலும் அந்த மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். “தயவுசெய்து இந்த பேரிடரின் போது மக்களுக்கு உதவுங்கள் மற்றும் அவர்களின் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்க” என்று அவர் கூறினார். தொடர் மழை காரணமாக பியாஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேர் மீட்கப்பட்டனர்.தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளும் மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது.அரசு பணியாளர்கள் எந்த நேரமும் மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Share This Article
Leave a review