உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுமி அடித்து கொ …

Rajubutheen P
2 Min Read

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி சேர்ந்தவர் திவ்யா. இவர் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் தேஜஸ்வி என்ற பெண் குழந்தையும் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவிற்கும், அவரது முதல் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து புழல் காந்தி இரண்டாவது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் திவ்யா பணிபுரிந்து வந்துள்ளார்.

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுமி அடித்து கொலை

மேலும் திவ்யா பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் குரோம்பேட்டை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ‌மேலும் திவ்யாவும், ஸ்ரீதரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெளியில் சுற்றி வந்துள்ளனர்.

நாளடைவில் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் வீட்டில் திவ்யாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும் இவர்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 6 வயது குழந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், குழந்தையின் அண்ணன் கூறினார்.

ரத்த கறைகள்

மேலும் நேற்று இரவு திவ்யாவும், ஸ்ரீதரும் தனி அறையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்பொழுது குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீதர் குழந்தையை கழிவறைக்குள் கொண்டு சென்று பயங்கரமாக தாக்கி உள்ளார்.

அதில் குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் மற்றும் பலத்த காயம் அடைந்ததை அடுத்து ஸ்ரீதர் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் புழல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த புழல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புழல் காவல்துறை

இந்த நிலையில் குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி இருவரும் தன் பேத்தியின் மரணத்திற்கு திவ்யாவும், திவ்யாவின் கள்ளக்காதலனும் தான் காரணம் என்று கூறி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்று கொண்ட புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சோபனா தேவி வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Share This Article
Leave a review