திண்டிவனம் அருகே உள்ள விட்லாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளியில் சகலகலாதரன்(வயது 59) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று மாலை 9-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு வைக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் மாணவியின் கையைப்பிடித்து சாக்லெட் கொடுத்தார். ஆனால் அதை வாங்க மறுத்ததால் , அந்த வயது முதிர்ந்த தலைமை ஆசிரியர் சாக்லெட் கொடுப்பது போல் அந்த சிறுமியின் அந்தரங்க பாகங்களில் கைவைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த 13 வயது சிறுமி , அறையிலிருந்து வெளியேறி நடந்த சம்பவத்தை சக தோழிகளிடமும் , அவரது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார் .
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் 300 கும் மேற்போட்டார் அந்த பள்ளியை சூழ்ந்து முற்றுகையிட்டனர் .

இந்த சம்பவத்தை அறிந்த ரோஷணை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதற்காக அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கே நின்ற பொதுமக்கள் தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் நிலைகுலைந்து போன ஆசிரியரை , பொதுமக்களின் பிடியில் இருந்து மீட்டு போலீசார் வாகனத்தில் ஏற்றினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு தாக்க முயன்றனர். போலீசார் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் தலைமை ஆசிரியரை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியர் சகலகலாதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.