கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.போலீசார் விசாரணை

2 Min Read
உயிரிழந்தவர்கள்

கோவை வடவள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 34 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி லக்‌ஷயா (29) பிரெஞ்சு டாக்டர் பட்டம் பெற்றுள்ளதோடு,வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களது 10 வயது மகள் யக்சிதா தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா (73) வசித்து வந்தார்.

- Advertisement -
Ad imageAd image
சடலமாக

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இப்பகுதிக்கு இவர்கள் வாடகைக்கு வந்துள்ளனர். இதனிடையே கடந்த வியாழக்கிழமை லக்க்ஷயா, குன்னூரில் உள்ள அவரது அப்பா பாலன் உடன் காலையில் போனில் பேசி உள்ளார். பின்னர் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பலமுறை போனில் அவர் அழைத்த போது, சுவிட் ஆப் என்றே வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் சீலா என்பவர் சனிக்கிழமை மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் வீட்டிற்கு வெளியே லைட் போட சென்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வருவதை அறிந்த அவர், பாலனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் பாலன் வீட்டிற்கு பார்த்த போது, வீடு உள்பக்கம் தாழிடப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வடவள்ளி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ்

காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்த போது, படுக்கை அறையில் ராஜேஷ் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாகவும், லக்‌ஷயா, பிரேமா, யக்சிதா ஆகிய மூன்று பேர் படுக்கையில் சடலமாக கிடந்ததும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் பல்வேறு விசாரணையை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து இருக்கலாம் எனவும், ராஜேஷ் தூக்கிட்டும், மற்றவர்கள் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தற்கொலைக்கு வேறு எதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரனையில்  கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review