ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; திருக்கோவிலூர் போலிசார் விசாரணை

2 Min Read
உயிரிழந்தவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது காடியார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராதாகிருஷ்ணன் வயது 55.ராதாகிருஷ்ணன் இதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.விவசாய வேலைகளை தானே செய்து வருவது ராதாகிருஷ்ணனின் வழக்கம். ராதாகிருஷ்ணன் தனது மனைவி அன்னபூரணி மற்றும் மகன் சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உரம் வைப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்றதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image
ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், பெங்களூருவில் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணனின் கடைசி மகன் ராஜேஷ் என்பவர் தனது தந்தை மற்றும் அண்ணன் சந்தோஷ் ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் அவர்கள் இருவரும் செல்போனை எடுக்கவில்லை என்பதால் தனது ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அவரது உறவினர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் செல் போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர் ஆனாலும் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மூவரையும் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது உறவினர்கள் இன்று மதியம் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.

அன்னபூரணி

அப்போது, அங்குள்ள கரும்பு மற்றும் மக்காசோளம் தோப்பில் அவர்கள் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜேஷ்

அவர்கள் இரந்து கிடந்த இடத்தில் மின் வேலி அமைக்கப்பட்ட தடம் இருந்துள்ளது.ஒரு வேளை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாமா?என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார்.அல்லது வேறு யாராவது கொலை செய்துவிட்டார்களா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மர்மமான முறையில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரேத பரிசோதனை முடிந்த உடன் உயிரிழப்பிற்கான காரணம் தெரியும் என எதிர்பார்கப்படுகிறது.போலீசார் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review