280 (கி.பி.) நூற்றாண்டிலிருந்து 337 (கி.பி.) நூற்றாண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர், பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரசரான இவர், ரோமானிய தலைநகரை கான்ஸ்டான்டினோபில் எனும் புதிய நகரை நிர்மாணித்து அங்கு மாற்றியமைத்தார்.
தாங்கள் கடைபிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசர் கான்ஸ்டன்டைனிடம் மக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுள்ளார்.

இந்த பதில் கடிதம் “ரீ ஸ்கிரிப்ட்” எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் மிசோரி மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பாய்ன் தலைமையில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். ரீ ஸ்கிரிப்டை தீவிரமாக ஆய்வு செய்த பேரா. பாய்ன், ஒரு நீண்ட ஆராய்ச்சியை முன்னெடுத்தார்.
அதன் விளைவாக கான்ஸ்டன்டைன் நகர மக்கள், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சின்னங்களின் வரிசையில் இந்த வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார். ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார். தற்போது 3 சுற்றுச்சுவர்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி குழுவினர், மீண்டும் கோடை கால விடுமுறை முடிந்ததும் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர உள்ளனர்.