முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு !

2 Min Read
சூர்யா மற்றும் அவரது மனைவி

சங்கராபுரம் அருகே முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால்: அப்பெண்ணின் உறவினர்கள் காதலனின் தாயை சாதிப் பெயரைச் சொல்லி சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு.!!

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள S. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் சூர்யா மேலும் சூரியாவின் குடும்பத்தினர் அதே கிராமத்தில் முடி திருத்தம் செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

தொழில் கல்வி (ITI) படிப்பினை முடித்துள்ள சூர்யா சென்னையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . மேலும் சூர்யாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த  பெண் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழந்து வருகின்றனர் .

இதனை அறிந்த பெண்ணின் வீட்டார்  சில மாதங்களாகவே சூர்யாவின் பெற்றோர்களிடம்  சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

‌                                                                       Upload

திருமணத்தின் போது

இன்று சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சூர்யா திருமணம் செய்து கொண்ட மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் உறவினர்கள் உன் மகன் எங்கே எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு என் மகன் எங்கு சென்றான் என்று  எனக்கு தெரியவில்லையென கூறியுள்ளார். அதற்கு பெண்ணின் உறவினர்கள் உன்னை அடித்து கொலை செய்தால் உன் மகன் தானாக வருவான் எனக் கூறி சூர்யாவின் வீட்டில் இருந்து அவரது அம்மா சுமதியை அசிங்கமாக  பேசியும் அவர் சார்ந்த சமுதாயப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியும் சூர்யாவின் வீட்டிலிருந்து தரதரதவென அடித்து இழுத்து வந்து அங்குள்ள ஒரு கோயிலில் அப் பெண்ணின் உறவினர்கள் சூரியாவின் தாய்  சுமதியை  சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது தாயை தாக்கும் பெண்ணின் உறவினர்கள் பரபரப்பு வீடியோ

மேலும் சூர்யாவின் தாய் சுமதி தற்போது கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் சாதிய வெறியாட்டத்தோடு ஊருக்கு மத்தியில் வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் அப்ப பெண்ணை தாக்கியவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சூர்யாவின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review