கும்பகோணம் தனியார் ஹோட்டலில் தோசைக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருப்பதை கண்டு கேட்ட அரசுத்துறை ஓட்டுனரை மிரட்டி விரட்டி அனுப்பி உள்ளனர் ஹோட்டல் ஊழியர்கள்.
ஹோட்டல்அரசுத்துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் தனது குடும்பத்தினருடன் கும்பகோணம் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டு கும்பகோணம் ரயில்நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ண பவனுக்கு சாப்பிட சென்று உள்ளார். தோசை ஆர்டர் சொல்லி சாப்பிட்டுள்ளார். சாம்பாரில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் அரசுத்துறை ஓட்டுனரை மிரட்டி அனுப்பி உள்ளனர்.
குடும்பத்தினருடன் சென்றதால் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் வந்ததாக தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.