நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை மற்றும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை எதிர்த்து திமுக தலைவரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘’தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’’ என்ற தலைப்பில் பாஜக அரசுக்கு எதிராக அணைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்திருந்தார் .
மேலும் மாவட்ட கழக செயலாளர்களின் தலைமையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பாகமுகவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பையும் விடுத்திருந்தார் .
அதன்படி மாநிலம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது . அதேபோல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் “10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்தது. அனால் கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் நமது மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டிருந்தது.” என்று பேசினார் .
தொடர்ந்து பேசிய அவர் “நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததால் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக உள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். பதவி சுகத்துக்காக ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் அடிமைக் கூட்டம் நாம் அல்ல.
நாம் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? என்று ஒன்றிய பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார் .
பாஜக அரசின் எதேச்சதிகார எண்ணம் கூட்டாட்சி தத்துவத்தை அழித்து விடும். இந்தியை வளர்ப்பதற்கு பதில் இந்தியாவை வளர்க்கப் பாருங்கள் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார் .
கேள்வி கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக. பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். ஒன்றிய பாஜக அரசின் சதியை திமுக தடுத்து நிறுத்தும். வடமாநிலங்களில் வரும் வெற்றியை வைத்தே ஆட்சியை தக்க வைக்க பாஜக சதி செய்கிறது” என பேசினார் .
முதலமைச்சர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எஸ்.சந்திரன், வல்லூர் எம்எஸ்.ரமேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.