விக்கிரவாண்டி முடிந்தது பரப்புரை யாருக்கு வெற்றி?

2 Min Read

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

- Advertisement -
Ad imageAd image

இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி விழாக்கோலம் கொண்டது என்னலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர்களின் பரப்பரை கூட்டம் அது மட்டும் அல்லாமல் அமைச்சர்களின் ஆக்கிரமிப்பு என களை கட்டியது விக்கிரவாண்டி தொகுதி. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் பெற்ற பகுதியாக மாறியது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்கிற முழு வீச்சோடு களமிறங்கி செயல்பட்டு திமுக. திமுகவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர தேர்தல் பரப்பு மேற்கொண்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீமானும் ஊர் ஊராக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியோடு தேர்தல் பரப்புரை ஓய்ந்தது விக்கிரவாண்டியில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இறுதி பரப்புரையை நிறைவு செய்தார். ஒரத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இறுதி பரப்புரையை மேற்கொண்டார். அதேபோன்று சூரப்பட்டு, கெடார் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இறுதி பரப்புரையை மேற்கொண்டார். அதன் பின்னர் வெளியூரிலிருந்து தங்கி இருந்த கட்சிக்காரர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறையில் அமலில் உள்ள நிலையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்து இருந்தார்

 

Share This Article

Leave a Reply