பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்-24 போலீஸார் பணியிட மாற்றம்.

2 Min Read
திரு.பல்வீர் சிங்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய  உட்பட்ட கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர் சிங் மீது இதுவரை சிபிசிஐடி காவல்துறையினர் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

அம்பாசமுத்திரம் காவல் நிலையதிற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்து நிலையில் . இது தொடர்பாக விசாரணை செய்த  சிபிசிஐடி காவல்துறையினர் 4 பிரிவுகள் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

அதேபோன்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனிப்பிரிவு சிறப்பு காவலர் போகன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இப்படி சிபிசிஐடி காவல்துறையினர் பல்புடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே வேளையில் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 பேர் மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு பணிகளை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில் சிபிசிஐடி காவல் துறையால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன் காவலர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான பணியிட மாற்ற நடவடிக்கை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வழக்கில் சேர்க்கப்பட்ட காவலர்கள் உட்பட 24 பேர் வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share This Article

Leave a Reply