திருப்பூர் மாவட்டம், அடுத்த காங்கேயம் அருகே ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்கள் விழுகிறது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் அருகில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் இரவு 1 மணி வரை வீடுகளின் மேல் கல்வீச்சு நடப்பதாக தெரிவிக்கிறார்கள். அந்த கற்களை யார் வீசுகிறார்கள் என தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு வீடாக கற்கள் விழ ஆரம்பித்ததால் 9 வீடுகளில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரவு நேரத்தில் விழுந்த கற்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்து சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை தொலைத்து விட்டு கற்களை யார் வீசியது என தேடியும் யாரும் சிக்கவில்லை. இதுகுறித்து காங்கேயம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். ஆனாலும் கற்கள் வந்து விழுகிறது,

அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதை அடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு, ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கூறுகையில்;- எத்தனை நாளைக்குத்தான் கல்லடி வாங்குவது, வேறு ஊருக்கு சென்று விடலாம் போலிருக்கிறது.

15 நாட்களுக்கு மேலாக நாங்களும் தூக்கத்தை தொலைத்து யார் கல் வீசுகிறார்கள் என பார்த்தோம். ஆனால் எதுவும் தெரியவில்லை. இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களிலும் டிரோன் கேமரா மூலமும் கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள்.
அவ்வாறு கண்காணித்தும் கற்கள் விழுகின்றன. அந்த கல் எங்கிருந்து விழுகிறது என தெரியவில்லை. கல் வீசுவது மனுஷனா இல்லை குட்டிச் சாத்தானா என தெரியவில்லை. போலீஸார் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட பேதம் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
விரைந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் ஒட்டபாளையம் கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



Leave a Reply
You must be logged in to post a comment.